எழுந்து வா பெண்ணே
பரந்து விரிந்த புவிக்கு
அவள் நாமம்
கரைபுரண்டு ஓடும் நதிகளுக்கு
அவள் பெயர்
அன்பு பாசம் கருணையின்
மொத்த உருவம் அவள் ..
அன்பான தேவதையை
அலங்கோலப்படுத்தும் சிலர்
மகிழ்ச்சியாய் சாலையில்..!
நிகழப் போவதை அறியாமல்
அவள்..
அனைவரும் எனது சகோதரி
என்று உறுதிமொழி எடுப்பவன்
கற்பழிக்கிறான்...
குருதியை அவளிடம் கண்டவன்
திருப்தி அடைகிறான்...!
பின்விளைவுகளைப் பற்றி அறியாமல்,
அனாதையாய் அலங்கோலமாய்
சாலை ஓரத்தில்
அவள் உடல்...!
வாழ்க்கையின் இறுதிகட்டத்தில்
பாசமான தாய்தந்தையர்,
அன்பான அக்கா அண்ணன்,
மனக்கண் முன் வர...
நிறைவேறாத ஆசைகள்
அவளை ஆசையாய் அழைக்க
இறப்புக்கும் அவளுக்கும்
நடுவே போராட்டம்...
இறுதியில் எமதர்மன்
அவளை வென்றுவிட
அமைதியாய் உறங்கும்
தன் உடலை துடிதுடித்துப் பார்க்கிறது...
அவளின் ஆன்மா...!
இதில் அஞ்சிநடுங்கி
முடங்கிப்போனவர்கள் பலர்..
இழந்துவிட்டோம்...!
பல கவிஞர்களையும்,
ஆசிரியர்களையும்,
தலைவர்களையும்,
நாம் முடங்கிக்கிடந்த காலம்
மலையேறிவிட்டது...!
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும் பறந்து வா..
தாமதம் செய்யாதே
விரைந்து எழு..
தகர்த்து எறி
உன் முன்னேற்றத்திற்கு
தடைகள் வந்தால்...
உறங்கிக் கிடந்தால்
விடியல் உன் வசமில்லை...
முடங்கிக்கிடந்தால்,பட்டுப்புழு
பட்டாம்பூச்சி ஆவதில்லை...!
வாழ்ந்து காட்டு...!
அன்பு செலுத்துவதில்
அன்னை தெரசாவாக...
சாதனை புரிவதில்
கல்பனா சாவ்லாவாக...
ஆளுமை செய்வதில்
இந்திரா காந்தியாக...
பண்புடன் வாழ்வதில்
வீரத் தமிழச்சியாக....!
விழித்தெழு பெண்ணே
விழித்தெழு...
புயலாய் நீ மாறிடு...!