கவியெழுதும் தோழமையே
கவியெழுதும் தோழமையே
***************************************************
எழுத்துத் தோழமையே நல்லெழுந்து வந்திடுவீர்
எழுத்துக் களந்தன்னில் பாந்தமாய் நடமிடுவீர்
பழுத்த தமிழ் கவிதன்னை வாயூர நல்சுவைக்க
அழகாக புனைந்திடுவீர் இனித்திடும் வரிகளாய் !
வல்லினமும் மெல்லினமும் சொல்லுக்கு சுவையே ஆம்
சொல்லூடும் இவ்வினங்கள் நல்லபடி பயணிக்க
அள்ளிவிடக் குறையாத அச்சொல்லீட்டும் பொருளாலே
கள்ளார்ந்த பொன்வண்டாய் சுவைத்திடுவோம் கவிதன்னை !!
வெண்பாக்களானாலும் பெண் தாக்கம் கொண்டாலும்
பண் பாடும் பறவையாய் பண்பாட்டை சீராக்க
துன்பாக்கம் இல்லாது கவித்தாக்கல் செய்திடுவீர்
உம் பாட்டை தண் பாட்டாய் அனலின்றி அமைத்திடுவீர் !!!
இலக்கணம் அறியாது பாக்களைப் புனைந்தாலும்
இலட்சணம் மாறாத பூக்களைப் பகிர்ந்திடுவீர்
அக்கரையாய் அமைத்திட்ட கவிப்பூக்கள் நல்லுலவ
பாக்களும் இனித்திடும் " எழுத்து " ம் சிறப்புறுமே !!!!
( இப்புனைவு என் மனவெளிப்பாடே தவிர எவர் மனதையும் புண்படுத்த அல்ல )