மறைந்து விட்ட பகலவன்
மறைந்து விட்ட பகலவன்
தமிழ் பெருமையின்
மிச்சமும் மறைந்தது
அதனின் அருமை
அன்று தெரிந்தது
கட்சி மத பேதமின்றி
கண்களில் கண்ணீர் வழிய
விடை கொடுத்து அனுப்பி
வைத்த மக்கள் !
படைப்பின் இலக்கணம்
வார்த்தையின் வீச்சு
எதிராளியையும் ஏங்க
வைக்கும் சொல் நயம்
எல்லாம் இழப்பு
இனி இந்த குரலும்
வார்த்தை வீச்சும்
எங்கள் கால முடிவின்
வரைக்கும்
இனி காண்போமா?