தவமாய் போர்க்கோலம் பூண்டு காத்திடுவீர்

அகிலவுலக தொடர் மொழியாய் ஆங்கிலம்
அரசாங்க இணை மொழியாய் இந்தி
அர்ச்சகப் பணி மொழியாய் சமஸ்கிருதம்
அகரமுதல ஆதி மொழி தமிழோ
ஆகரம் துறந்து அணியாப்பு மறந்து
அந்நியம் கலந்து அழிவைத் தேடிடும்..

தமிழ் ஆர்வலர்களே தன்மானத் தோழர்களே
தமிழால் பிழைக்கும் தற்குறிப் பிழைகளை
தார்க்கோலால் தணலொடு தாக்கி
தமிழ் மண்ணிலிருந்தே துரத்திடுவீர்
தாய்மொழி கொள்ளியில் பொசுங்கும் முன்னே
தவமாய் போர்க்கோலம் பூண்டு காத்திடுவீர்...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Aug-18, 11:31 am)
பார்வை : 148

மேலே