உன்னால் முடியுமெனில்

கசக்கிய மலரை
மீண்டும் பொறுத்தி
மலர்வி

கொட்டிய ரத்தத்தை
மீள் செலுத்தி
காயங்களழி

விடுவித்த உயிரை
சிறைபிடி

அந்தத் தாயை
மனைவியை
சகோதரியை
மகளை
மாசற்று
திருப்பிக்கொடு

உன்னால் முடிகின்ற
அந்நாளில்
நீசனே
வன்புணர்!

- சுப்ரமண்ய செல்வா -

[உலகெங்கும் உருக்குக்குலைக்கப்படும்
ஹசீபாக்களுக்கும், ஹாசினிகளுக்கும் சமர்ப்பணம்]

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (29-Aug-18, 8:02 pm)
பார்வை : 403

மேலே