தமிழ்
வையகம் தந்த வான்புகழ் மொழியாம்!
வள்ளுவன் கண்ட முப்பால் மொழியாம்!
பாரதி புகழ்ந்த மெல்லிசை மொழியாம்!
பாமரனும் பயிலும் முத்தமிழ் மொழியே!!!
மன்னர்கள் போற்றும் சங்கமிகு மொழியாம்!
மங்கையருக்கேற்ற அங்கமிகு மொழியாம்!
சான்றோர் போற்றும் சரித்திர மொழியாம்!
சங்கே முழங்கு.என் தமிழ் மொழியே!
"அகிலம் அனைத்திலும் ஆயிர மொழிகளிருப்பினும்
வீறுநடை போடும் தமிழ்." ( புது குரல் )