jamal7865 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  jamal7865
இடம்:  பள்ளப்பட்டி
பிறந்த தேதி :  03-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2018
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  24

என் படைப்புகள்
jamal7865 செய்திகள்
jamal7865 - jamal7865 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 1:48 pm

ஆயிரமாயிரம் கலசங்கள் உண்டு - ஆனால்
அந்த ஓர் கலசத்திற்கு மட்டும் - நிழல் கூட
புவியில் அடைக்கலம் என்பதே கிடையாது !!!

"தஞ்சை பெரியகோயில் "

சோழ மண்டலத்தில் சோம்பேறிகள் இல்லை ...
என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு !!!

மேலும்

கோபுரங்கள் நிறைந்திருக்கும் தமிழ் நாட்டில் நிழலுக்காக கூட உழைப்பாளிகள் ஒதுங்கி நிற்கமாட்டார்கள் . வெய்யிலும் வியர்வையும் தானே அவர்கள் விழைவது ! கோபுர நிழற் சிந்தனை அருமை கவி ஜமாலுதீன் 02-Apr-2018 9:47 am
சான்றுகள் யாவும் இமைகள் போல் பேணிக் காக்கப்பட வேண்டியவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 6:13 pm
jamal7865 - மலர்91 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2018 11:07 pm

மத ஊர்வலங்கள் தேவையா?

மேலும்

மத ஊர்வலம் தேவை இல்லை..... மனதால் உணரப்படும் பக்தி போதுமானது. 21-Sep-2018 10:05 am
மதம், மத ஊர்வலம், ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான். 20-Sep-2018 1:00 am
மதம், மத ஊர்வலம் ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான். 20-Sep-2018 12:57 am
மதம் என்பது கட்டாயத் தேவை... மத ஊர்வலம் தேவையில்லை ஏன்.....? X என்ற ஒரு மதம் தங்கள் கடவுள் கூறியதாக பல்வேறு கொள்கைகளை வகுத்து அதன் படி செயல்பட்டால் மதம் தேவை... மதத்தின் கொள்கைகளைப் பெரும்பாலும் பின்பற்றுபவன் ஏழை தானே தவிர ஒரு குடும்பம் மூன்று வேளை உண்ணும் உணவின் மதிப்பை ஒருவன் உயர் தர உணவகத்தில் தனக்கு பரிமாறிய சர்வருக்கு கொடுப்பான் என்றாள் அவனுக்கு மதம் முக்கியமில்லை ஏன்....? அவர் மதம் சார்ந்த ஊர்வலம் மற்றும் திருவிழாக்களில் கலந்து கொண்டார் என்றால் அங்கு கூடுகின்ற மக்கள் அவனுக்கு தேவை என்பதற்காகவே தவிர மத உர்வலத்தின் மூலம் மக்களை நல்வழிப்படுத்த அல்ல.... நன்றி அ . சேர்மன் 8428921950 15-Sep-2018 11:25 am
jamal7865 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2018 11:43 pm

அளவோடு இருந்தால்
அகல் விளக்கு !
அளவு கடந்தால்
அதை விலக்கு !!!

மேலும்

jamal7865 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2018 3:37 am

வையகம் தந்த வான்புகழ் மொழியாம்!
வள்ளுவன் கண்ட முப்பால் மொழியாம்!

பாரதி புகழ்ந்த மெல்லிசை மொழியாம்!
பாமரனும் பயிலும் முத்தமிழ் மொழியே!!!

மன்னர்கள் போற்றும் சங்கமிகு மொழியாம்!
மங்கையருக்கேற்ற அங்கமிகு மொழியாம்!

சான்றோர் போற்றும் சரித்திர மொழியாம்!
சங்கே முழங்கு.என் தமிழ் மொழியே!

"அகிலம் அனைத்திலும் ஆயிர மொழிகளிருப்பினும்
வீறுநடை போடும் தமிழ்." ( புது குரல் )

மேலும்

jamal7865 - வருண் மகிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2018 3:51 pm

அழகிய கண்கள் அலைமோதுகையில்
கொஞ்சிப் பார்க்குது காதல் சாவி ...!

அழகுப் பதுமையின் அங்கம் பார்க்கையில்
கொஞ்சம் எட்டிப் பார்க்குது காமச் சாவி ...!

இளமையை ரசிக்க இன்பச் சாவி!
முதுமையில் இனிக்கும் அனுபவச் சாவி !

கல்லச் சாவி கொண்டு திறந்தால்
கல்லறை சென்றும் கலவரமே ..!

நல்ல சாவி கொண்டு திறந்தால்
நடப்பவை எல்லாம் நல்வரவே ...!

எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
ஜனனத்தில் நுழைய ...
மரணத்தில் தொலைய...

எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
சாவியை தொலைத்தோர் சிலர் ..
பூட்டை தேடிக்கொண்டே பலர் ...?

எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு
எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...!
தேடிக் கண்டு நீ கொண்டால்

மேலும்

நன்றி பிரியா 20-Sep-2018 6:50 pm
எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...! தேடிக் கண்டு நீ கொண்டால் வாழ்க்கை தேடல் முடிந்திடுமே?!! சரியான பாதையில் சென்றால் நினைத்தது எல்லாம் நடக்கும் ....என்பது..இந்த சாவி என்பதில் கூறியுள்ளீர்கள் 20-Sep-2018 3:06 pm
thank u bhuvi... 08-Sep-2018 8:40 pm
எல்லோரிடத்தும் ஒரு சாவி ... ஜனனத்தில் நுழைய ... மரணத்தில் தொலைய... மனிதனின் வாழ்க்கை இரண்டு வரிகளில் அருமை அண்ணா 08-Sep-2018 6:07 pm
jamal7865 - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2018 9:55 pm

அடக்குமுறை எனும் ஆயுதத்தை
அஹிம்சை எனும் அன்பினால்...
அகிலமதை குழந்தையாய்
அனைத்து கொண்ட அண்ணலே!!!

சுதந்திர தாகத்தை தணிக்க
நீ கையாண்ட யுக்தியை...
ஆட்சி செய்த அந்நியரும்
அந்நியரில் சில கன்னியரும்
வியக்கவைத்த வித்தகரே!!!

விடுதலை பெற்று தந்து...
விண்ணை விட்டுச்சென்ற விண்மீனே!!!
உம்மை வீட்டுச்சிறையில்-புகைப்படமாய்...
வைத்துக்கொண்டோம் எம்முடனே!!!

இன்னொரு நீ எமக்கு பிறப்பாய் என்று!!!

மேலும்

jamal7865 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2018 7:01 pm

படிப்பினை புகட்டி ,பண்பினை வளர்த்து ;
அறிவினை அடர்த்தி ,அறமதைத் திணித்து ;
இசையினை கொடுத்து ,இயல்பினை மாற்றி ;
ஆக்கத்தை பெருக்கி ,அழிவினை குறைத்து ;
உவமையை பற்றி ,உலகையே சுற்றி ;
ஊக்கத்தை ஊட்டி ,உரமதை பெற்று ;...

நதியினை இணைத்து ,வளமதை பெருக்கி ;
முகிலினை கிழித்து ,வானத்தை தொட்டு ;
வையகம் வியந்து ,வான்புகழ் கிடைத்து ;
விஞ்ஞான உலகினில் ,விசித்திரம் படைத்து ;
அஞ்ஞான புகழினில் ,ஆட்சியை நடத்தி ;
மெய்ஞான வாழ்வினில் ,மேதமையை கட்டி ;...

மேலோங்கும் யுக்தியை ,மேன்மையுடன

மேலும்

jamal7865 - jamal7865 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Apr-2018 12:59 pm

முகம் பார்த்து சிரித்தேன் !
முழு மதி கண்டேன் !
கண் பார்த்து மறந்தேன் !
கனவுகள் கண்டேன் !
மனம் பார்த்து உறைந்தேன் !
ஏன் மதியையும் மறந்தேன் !

மலைச்சாரல்களும் ,மழைக்காற்றும்
மனமயக்கும் உன் மணமும் !
மாலை இதத்தினிலே !
மன்னவள் மடியினிலே !
மாலை சூடும் விண்மீன்கள் !
சோபனம் கூறும் நிலவினிலே !
புல்வெளி காற்றும் புகழ் கூறும் எந்தனுக்கு !
ஏங்குகிறேன் உந்தன் நல்பதிலுக்கு !!!

மேலும்

கனவுகள் உள்ள வரை நினைவுகள் வசப்படும். போராட்டங்கள் கடக்காத வரை வெற்றியும் உன்னை விட்டு தொலைவாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 6:07 pm
jamal7865 - jamal7865 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2018 1:11 pm

உதடுகள் இணையாத உன்னத காதல் !!!

காதல் வந்த காலத்தில்
கலவு கொண்ட இதயத்தை
காலங்கள் கடந்து சென்று
கண்ணியத்தில் வைத்திட்ட
கண்ணியவள் வாழ்ந்திடவே !
கருணைதனை காட்டிடுவாய் !!!

காதல் தந்த கனியதனை
கனவுகளில் சுவைத்திட்டு
காதலின் கன்னியத்தை
காத்திட்ட காதலரே !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
மேலே