தாழ்வு மனப்பான்மை

ஏ மனிதனே! உன்னை
தாழ்த்தி கொள்ளாதே
திருத்தி கொள்;
துவண்டு விடாதே துணிந்து எழு
துளிர் விடும் காலம் இது.

தோல்விகள் தொடர்வதில்லை
வெற்றிகள் நிலைப்பதில்லை;
துன்பங்கள் மென்மேலும் உன்னை மெருகேற்றி கொள்ளவே
தாழ்த்தி கொள்ள அல்ல

ஒப்பிட்டு உடைந்து விடாதே
தேடி பார்! உன்னிடத்திலும் தனித்துவம் உண்டு;
விதியென விரக்தி கொள்ளாதே
உயர்வெண்ணம் கொள், உயர் வாழும் வரை.

பிறக்கும் போது தாழ்ந்து இருந்தால் தவறில்லை
இறக்கும் வரை தாழ்ந்து இருக்காதே;
இயலாமை என்னும் மனபோர்வையை விலக்கு
இயன்று இறக்கும் வரை வாழ்.
-- கயல்

எழுதியவர் : kayal (18-Sep-18, 2:53 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : thaalvu manappanmai
பார்வை : 104

மேலே