சொற்கள் கவிஞர் இரா இரவி

சொற்கள் ! கவிஞர் இரா .இரவி !

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்
உண்மைதான் கவனமாகப் பேசுவோம் !

நல்லது பேசிட நல்லதே நடக்கும்
நாளும் இன்சொல்லே பேசிடுவோம் !

யாருக்கும் சாபம் இட வேண்டாம்
யார் மனதையும் புண் படுத்த வேண்டாம் !

தீக்காயம் ஆறி விடும் சில நாளில்
சொல்காயம் ஆறாது சொன்னவர் வள்ளுவர் !

கனி போன்ற இனிமை சொற்கள் இருக்க
காய் போன்ற வன்சொல் எதற்கு என்றார் !

இனிமையாகப் பேசினால் உங்களை உடன்
எல்லோருக்கும் பிடிக்கும் உணர்ந்திடுங்கள் !

உங்களிடம் மற்றவர் எப்படி பேச வேண்டுமென
உங்கள் மனம் விரும்புகிறதோ அப்படியே பேசுங்கள் !

சொர்களால் யாரையும் காயப் படுத்த வேண்டாம்
சோகத்தில் ஆழ்த்தி சுகம் காண வேண்டாம் !

.அன்பாகப் பேசுங்கள் அனைவருக்கும் பிடிக்கும்
ஆணவப் பேச்சு ஒருபோதும் வேண்டாம் !

மலர் போன்ற இன் சொற்கள் இருக்கையில்
முள் போன்ற வன் சொற்கள் எதற்கு ?
--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (3-Oct-18, 9:26 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 59

மேலே