விதவை

நான் அமைதியானவள் -அல்ல
அமைதியாக்கப் பட்டேன்/
நான் அடங்கிப் போகின்றவள் இல்லை
அடைக்கி ஒடுக்கப்பட்டேன்/

நான் கூண்டுக் கிளி அல்ல
ஊராரின் சம்பிரதாயம் என்னும்
வேலிக்குள் அடைக்கப்பட்டேன் /

நான் நாகரிகம் தெரியாதவள் இல்லை
நடை உடை பாவனைக்கு சமுதாயம்
தடை போட்டு விட்ட பாவியானேன்/

ஆயிரம் எதிரி எதிரே வந்தாலும்/ எதிர்த்து நின்று போரிடும் பிறவி நான்./
ஊர் வாயால் வெளியாகும் /சொற்களை எதிர்க்க முடியாத கோளையானேன்/

பொல்லாத சமுதாயத்தைக் கண்டு குமுறுது நெஞ்சம் என்றென்றும்/
எரிமலையாக வெடித்துச் சிதறினால். தாங்குமா? இன்றும் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Oct-18, 5:37 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vithavai
பார்வை : 63

மேலே