மழைக்காதல்

நள்ளிரவு
குளிர்
மழைநிறை
வானிருளில்
ஜன்னலருகே
நான்…

உன் உறங்குதல்
கலையக் கூடாதென
சப்தமின்றி
சுவாசிக்கின்றேன்…

உனக்கான
நாளையப் பூ
வெளியே
மழையில்
நனைகிறது…

உள்ளே நானும்…

எழுதியவர் : அருள்.M.வர்மன் (30-Oct-18, 9:22 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 127

புதிய படைப்புகள்

மேலே