வரமொன்று தரவேண்டும்
வரமொன்று தர வேண்டும்
வரசித்தி விநாயகா
ஏழைகளின் பசியைப் போக்கி
ஏற்றத்தை தந்து விடு!!!!!
கனவுடன் வாழ்கிறோம்
கானல் நீராக்கி விடாதே
நாளும் பரிதவிக்கிறோம்
நாளை என்ன நடக்குமென்று!!!!
விடைகாணா வினாக்களுடன்
விடியுமா என எண்ணுகிறோம்
ஆண்டவா சுதந்திரம் கிடைத்தும்
அனுபவிக்க முடியவில்லை!!!!!
மூதாதையரின் கொள்கைகளை
மூடர் கூட்டம் பின்பற்றவில்லை
நய வஞ்சகர்களின் நடுவிலே
நாதியற்று கிடக்கிறோம்!!!!
ஏனடா மனிதனாய் பிறந்தோம்
எவர் வந்து துயர் தீர்ப்பர்
இன்னலுடன் நாளும் நாங்கள்
இறைவா பதில் கூறு!!!!!
அலைகாணா கடலுக்கு
அழகென்று ஒன்றுமில்லை
வாட்டத்தை போக்கி விடு
வாழ்வுதனை தந்து விடு!!!!!