ஈயுந் தலைமேல் மிதித்தேறி இருத்தலால் கதமின்மை நன்று – நாலடியார் 61

நேரிசை வெண்பா

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. 61

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும்; அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும்; ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால் அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர் எரிந்து விழுஞ் சினமிலராயிருப்பது நல்லது.

கருத்து:

பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சான்றோர் சினம் கொள்ளலாகாது.

விளக்கம்:

இறத்தல் இங்கே ஒழுகுதல் என்னும் பொருட்டு.

தாழ்ந்ததென்று கூறும் பொருட்டு ஈயைக் கூறினார்.

கதம் இன்மை - சினம் உடையர் ஆகாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-19, 7:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே