உழைப்பாளி

உழைப்பாளி

உழைப்பாளி உதவா விட்டால்,
ஒருகோடி பொன்னி ருந்தும்,
பிழைப்பாரோ செல்வந் தர்கள்?
பெருந்தன்மை பெரிதும் வேண்டும்!
உழைப்பாளி உழைத்துச் சிந்தும்
ஒவ்வொரு துளிவி யர்வை,
மழைப்போல மாந்த ருக்கு!
மாற்றங்கள் அவரால் தானே!

மா.அரங்கநாதன்

எழுதியவர் : மா.அரங்கநாதன் (1-Feb-19, 9:23 pm)
சேர்த்தது : மாஅரங்கநாதன்
பார்வை : 99

மேலே