காதல் கவிஞர் இரா இரவி

காதல் ! கவிஞர் இரா .இரவி !

கற்காலம் தொடங்கி கணினி காலம் வரை
காலம் தோறும் தொடரும் விந்தை காதல் !

அம்பிகாவதி அமராவதி தொடங்கி
அனுசுகா காலம் வரை தொடர்கின்றது !

பார்த்ததும் வருவதல்ல காதல் !
பார்க்ப் பார்க்க வரும் காதல் !

புறம் பார்த்து வருவதல்ல காதல் !
அகம் பார்த்து வருவதே காதல் !

இரும்பைக் கவரும் காந்தமென
இரு விழிகள் கவருகின்றன !

விழிகள் விழியே சென்று
விசித்திரம் புரிகின்றன உள்ளே !

தனியாகப் பேசிட வைக்கும்
பிருந்தால் தவிக்க வைக்கும் !

மூன்று எழுத்து முத்தாப்பு !
முகத்தில் உண்டாக்கும் பளபளப்பு !

அறிந்தவர்கள் போற்றி மகிழ்கிறார்கள் !
அறியாதவர்கள் தூற்றி மகிழ்கிறார்கள் !

மண்ணில் பிறந்ததன் பயனே
மனதில் காதல் பிறப்பதுதான் !

முத்தம் முன்னுரையாகின்றது !
இன்பம் முடிவுரையாகிகின்றது !

எதிர்ப்பு என்பது என்றும் உண்டு !
துளிர்ப்பு என்பது என்றும் உண்டு !.

மனம் செம்மையாகும் குணம் சீராகும் !
தீய பழக்கங்கள் தூர விலகும் !

கண் அசைத்தால் போதும் காரியங்கள் முடியும் !
கை கூடி விட்டால் ஊட்டச்சத்து இலவயம் !

கோபம் காணமல் போகும் !
வயபட்டுவிட்டால் போதும் !

சிறகுகள் இன்றியே வானில் பறக்கலாம் !
வானம் வசப்படும் வசந்தம் வசமாகும் !

கனவுகள் கணக்கின்றி வந்து போகும் !
கவிதைகள் குற்றால அருவியாக கொட்டும் !

முடியாதவை முடித்திட உதவும் !
தெரியாதவை தெரிந்திட உதவும் !

அறியாதவை அறிந்திட உதவும் !
அனைத்தும் இன்பமயமாகும் !

சொல்லில் அடங்காத உணர்வு !
சுகம் இதம் தரும் நினைவு !

என்று நினைத்தாலும் இனிக்கும் !
நின்று நினைவில் இதம் தரும் !

காதல் கவிதைகள்! கவிஞர் இரா .இரவி !

ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !

நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை அவள் !

மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !

பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !

சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !

அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !

முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !

காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் ! கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை ! கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள் !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள் !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை ! கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் ! கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர் கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு ! கவிஞர் இரா .இரவி .

பேசும் போது உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம் உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள்
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள் !என்றான் .
பொறாமையில் பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !

பார்த்துப் போமா ! கவிஞர் இரா .இரவி !
உன்னை வழியனுப்பும்
உன் அம்மா பார்த்துப் போமா !
என்கிறார்கள் !
சாலையில் கடந்தும் செல்லும் நீ
என்னை பார்த்துவிட்டுத்தான்
செல்கிறாய் !

பார்த்து விட்டனர் ! கவிஞர் இரா .இரவி !
யாரும் பார்க்காதபோது
இருவரும் பார்த்துக் கொள்கிறோம் !
நாம் பார்த்துக் கொள்வதை
எல்லோரும் பார்த்து விட்டனர் !

அழகோ அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ பேசுவது அழகுதான்
நான் பேசாமலே
அதனை ரசிப்பது வழக்கம் !
ஆனாலும்
நீ பேசாமல்
இருக்கும்போதோ
அழகோ அழகு !
கொள்ளை அழகு !
.
அழித்த கோட்டை ! கவிஞர் இரா .இரவி !
உச்சி எடுத்து சீவ வேண்டாம் என்று
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய் !
இன்று வரை உச்சி எடுப்பதில்லை !
கிழித்த கோட்டை தாண்டுவதில்லை
என்பதை போல
நீ அழித்த கோட்டை
நான் போடுவதே இல்லை !

தொட்டு விட்டது ! கவிஞர் இரா .இரவி !
நெற்றியில் நீ வைத்த
முத்தம் !
முத்தமே அல்ல !
என்னுள் யுத்தம் செய்தது !
ஊடுருவி உயிர் வரை சென்று
தொட்டு விட்டது !

சத்து ! கவிஞர் இரா .இரவி !
இதழ்களில் நடந்த முத்தம்
நதி கடலில் கலந்த
நல்ல சங்கமமாய் !
கடலில் கிடைப்பது முத்து !
முத்தத்தில் கிடைப்பது சத்து !

எனக்கு வலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் !
மின் அஞ்சலில் அனுப்பு போதும் !
அஞ்சலில் அனுப்பினால்
அஞ்சல்காரர் உரை மீது
பதிக்கும் முத்திரைகள்
உனக்கு வலிக்காவிட்டாலும்
எனக்கு வலிக்கும் !

அது எப்படி ? கவிஞர் இரா .இரவி !
ரோஜா அழகுதான் !
உலகம் அறிந்த உண்மைதான் !
நீ தலையில் சூடியதும்
ரோஜாவின் அழகு
குறைந்து விடுகிறது !
உன் அழகோ
கூடி விடுகிறது !
அது எப்படி ?

என் சுவாசமே நீதானே ! கவிஞர் இரா .இரவி !
மல்லிகை வாசம்தான் !
ஆனால்
உன் வாசத்தின் முன்னே
மல்லிகை வாசம்
தோற்று விடுகின்றது !
உன் வாசத்திற்கு இணையான
வாசம் உலகில் இல்லை
என் சுவாசம் சொல்லியது !
என் சுவாசமே நீதானே !

எல்லாமே அழகு ! கவிஞர் இரா .இரவி !
நீ நின்றால் அழகு !
நீ நடந்தால் பேரழகு !
நீ பார்த்தால் அழகு !
நீ முறைத்தால் பேரழகு !
நீ சிரித்தால் அழகு !
நீ சிகை கோதினால் பேரழகு !
எல்லாமே அழகு !

அழகு கூடி விடும் ! கவிஞர் இரா .இரவி !
ஆடைகளில் சுடிதார்
அழகுதான் !
அனைவரும் அறிந்ததுதான் !
ஆனாலும்
அவள் அணிந்ததும் சுடிதார்
அழகு கூடி விடும்
அற்புதம் நிகழ்த்துவது
அவளின் அழகு !

காண வந்தேன் ! கவிஞர் இரா .இரவி !
கடவுள் நம்பிக்கை
எனக்கு
இல்லாவிட்டாலும்
திருவிழாவிற்கு வந்தேன்
கடவுளை வணங்க அல்ல !
கன்னி உன்னைக் காண
வந்தேன் !
கடவுளுக்காக வந்தவர்கள்
கடவுளை தரிசிக்க
உனக்காக வந்த நான்
உன்னை தரிசித்தேன் !

.நினைத்தாலே இனிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
சுவைத்தால்தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும்
இனிய காதல் !

பாட்டு ! கவிஞர் இரா .இரவி !
என் செல்லிடப் பேசியில்
எந்தப் பாட்டையும்
வைக்கவில்லை நான் !
ஏன் தெரியுமா ?
பாட்டுப் பிடித்த ஆர்வத்தில் நீ
பேசாமல் இருந்து விடக்
கூடாது !

என்னவள் ! கவிஞர் இரா .இரவி !

நடந்து வரும் நந்தவனம் !
நடமாடும் நயாகரா !

வலம் வரும் வானவில் !
வஞ்சி வற்றாத ஜீவநதி !

பசிப் போக்கும் அட்சயப்பாத்திரம் !
பார்ப்பதற்கு அஜந்தா ஓவியம் !

சிரித்தால் ஜொலிக்கும் நட்சத்திரம் !
சிங்காரி அவள் சித்தன்னவாசல் !

கண்களால் பேசும் சிலை !
கண்டால் பேரின்ப நிலை !

மண்ணில் உள்ள சொர்க்கம் !
மாறாத நிரந்தர மார்கழி !

கர்வம் இல்லாக் கண்ணழகி !
காந்தப் பேச்சுக் குரலழகி !

வாசம் வீ சும் வனப்பழகி !
நேசம் காட்டும் பாச அழகி !

உலக அழகுகள் வியக்கும் அழகி !
உணர்வில் கலந்த உயிரழகி !

பெண்களே ரசிக்கும் பேரழகி !
நான் ருசிக்கும் கனியழகி !

அறிவில் அவள் அறிவாளி !
அவள் முன் நான் கோமாளி !

அத்தனை உவமைகளும் !
அற்புதமாய்ப் பொருந்தும் !
வெள்ளையும் இல்லை *


அவள் ! கவிஞர் இரா .இரவி


கருப்பும் இல்லை *
உயரமும் இல்லை
குள்ளமும் இல்லை

பேரழகியும் இல்லை
அசிங்கமும் இல்லை

அறிவாளியும் இல்லை
முட்டாளும் இல்லை

ஆர்ப்பட்டமும் இல்லை
அமைதியும் இல்லை

அவளுக்கு உவமை
அவனியில் இல்லை

புன்னகை செய்தால்
பூரிக்கும் உள்ளம்

மூளையில் நுழைந்து
மூலையில் அமர்ந்தாள் !

காதலர்கள் கவிஞர் இரா .இரவி

ஊடல் காரணமாக
இருவரும் இனி
சந்திக்க மாட்டோம்
என முடிவு எடுத்து விட்டு
இனி எப்போது சந்திப்போம்
என்று சந்திப்பைப் பற்றியே
சிந்தித்து ஏங்குபவர்கள் !

நினைவுச் சிலுவை கவிஞர் இரா .இரவி

பசுமரத்து ஆணியாக
பாவையின் நினைவுகள்

கிறித்தவர்கள் வணங்கும்
ஏசுவிற்கு ஒரே ஒரு முறைதான் சிலுவை

எனக்கு உன்னை நினைக்கும்
ஒவ்வொரு முறையும் நினைவுச் சிலுவை

ஏசு உயிர்த்து எழுந்ததாகச் சொல்**வார்கள்*
எனக்கு உயிர்த்து எழ வாய்ப்பே இல்லை !

தொடர்கதையானது ! கவிஞர் இரா .இரவி

அவளைப் பார்த்தால்
போதும் என்று நினைத்தேன்
பார்த்தேன் !
அவளிடம் பேசினால்
போதும் என்று நினைத்தேன்
பேசினேன் !
அவளைத் தீண்டினால்
போதும் என்று நினைத்தேன்
தீண்டினேன் !
பார்த்தல் பேசல்
தீண்டல்
தொடர்கதையானது !

கோலம் ! கவிஞர் இரா .இரவி

கோலம் போடும் உந்தன்
கோலம் காண !
அதிக நேரம் தூங்கும் நான்
அதிகாலை எழுந்தேன் !
உதய சூரியனை
உன்னால் பார்த்தேன் !
பனி மலரையும்
பார்த்து ரசித்தேன் !
நீயும் வந்தாய் !
கதவு திறந்தாய் !
**கூ**ட்டி**த்** தள்ளினாய் !
வாசல் தெளித்தாய் !
புள்ளி வைத்தாய் !
கோலம் போட்டாய் !
கோலம் பார்த்தேன் !
கல்வெட்டாய்ப் பதிந்தது !
கன்னி உன் நினைவு ! *

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் ! கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை ! கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள் !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள் !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை ! கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் ! கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர் கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு ! கவிஞர் இரா .இரவி .

பேசும் போது உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம் உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள்
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள் !என்றான் .
பொறாமையில் பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !
.காதல் !
மூன்றெழுத்து உணர்வு
மூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !
கர்வம் கொள்ள வைக்கும் !
கனவுகளை வளர்க்கும் !
உடல் இங்கும் எண்ணம் அங்கும் !
அடிக்கடி அலைபாயும் !
அழகு கொஞ்சம் கூடும் !
அறிவு கொஞ்சம் குறையும் !
---------------------------------------------
விழிகளில் நுழைந்து
மூளையில் அவள்
சிம்மாசனம் இட்டு
அமர்ந்து விடுகிறாள் !
காதல் ரசவாதம்
தொடர்கின்றது !
கற்பனைக் காவியம்
வளர்கின்றது !
-----------------------------------------
முன்பு தேநீரை சூடாகக்
குடிக்காதவன் !
அவள் இருக்குமிடம்
இதயமல்ல மூளை
என்று தெரிந்ததும்
இப்போது தேநீரை
சூடாகவே குடிக்கிறேன் !
-----------------------------
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன !
யார் அதிகம் கொடுத்தது
யார் அதிகம் பெற்றது
கண்டுபிடிப்பது கடினம் !
-------------------------------
அவள் பேசும் சொற்களை
காதுகள் கேட்பதை விட
அவள் பேச்சால்
அசையும் உதடுகளை
கண்கள் இமைக்காமல்
கண்காணிப்பதால்
என்ன சொன்னாள்
என்பது புரியாமலே
தலை ஆட்டி விடுகிறேன்.
-----------------------------
காதலை அவள் உதட்டால்
உச்சரிக்காவிட்டாலும்
கண்களால் உச்சரிப்பதை
கண்கள் உணர்ந்து விடுகின்றன !
--------------------------------
மறந்து விட்டேன் அவளை என்று
உதடுகள் உச்சரித்தாலும்
மூளையின் ஒரு மூலையில்
அவள் நிரந்தரமாக !
காத(லி)ல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

உனைப்பார்க்கும்
நான் மட்டுமல்ல
எல்லா ஆண்கள் மட்டுமல்ல
எல்லாப் பெண்களும்
வியந்துப் போகிறார்கள்
இவ்வளவு அழகா ? என்று !

-----------------------------------------------
உனக்கானக் காத்திருப்பு சுகம்தான்
வழி மேல் விழி வைத்து மட்டுமல்ல
வழி மேல் மனதையும் வைத்துக் காத்திருக்கிறேன் !
தாமதமாகும் நிமிடங்களில்
உன் மீது கோபம் வந்தாலும்
வந்த கோபம் நீ வந்ததும்
பறந்து விடுகின்றன !
-----------------------------------------------
ஒற்றை ரோஜா தந்தேன்
திரும்பி விட்டாய் !
வாங்க மறுக்கிறாயோ ?
என்று நினைத்தேன்
வைத்து விடுங்க !
என்றாய் !
வைத்து விட்ட பின் ரோஜா
என்னைப்பார்த்து விரல் ஆட்டியது !
-----------------------------------------------
விழிகள் சந்தித்து
இதயங்கள் இடம் மாறி
பரிசுப் பொருட்கள்
பரிமாறியது காதலின் தொடக்கம் !
இதழ்கள் வழி
உமிழ்நீர் பரிமாற்றம் காதலின் பரிணாமம் !
மாலை மாற்றத்திற்குப் பின்
உடல்கள் பரிமாற்றம் காதலின் உச்சம் !
-----------------------------------------------
ஓரக் கண்ணால்
ஒரே ஒரு பார்வைதான் பாவை பார்த்தால் !
என்னுள் பரவசம்
எண்ணிலடங்கா இன்பம் !
பார்வையின் சக்தி
பார்த்தவர்களுக்குதான் புரியும் !
கூர்ந்து பார்த்து
நங்கூரம் இட்டுச் சென்றாள் !
கப்பல் என நின்று விட்டேன்
நான் அதே இடத்தில !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (14-Feb-19, 8:50 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 202

மேலே