காதல்

மல்லிகைப்பூ அவளுக்கு பிடிக்கும்
என்று நினைத்து இன்று நான்
அவளை சந்தித்தபோது ஒரு சாரம்
வாங்கித்தர அதை அவளும் புன்னகைத்து
வாங்கிக்கொண்டாள் ,ஆனால் அதை
நான் நினைத்தவாறு தலையில்
சூடிக்கொள்ளவில்லை மாறாய் தன
முகத்தில் வைத்து முகர்ந்து பின்
அதற்கொரு முத்தம் தந்தாள்
என்னிடமே திரும்பி தந்துவிட்டாள்
ஏன் இப்படி செய்தாய் என்று நான் கேட்க
அவள் சொன்னாள், 'தலைவா நீ விரும்பும்
பூ இது இம் மல்லிகைப்பூ அதனால் அதன்
வாசத்தை முகர்ந்தேன் இல்லை நின் அன்பை
அதில் உன்மீது நான் வைத்த காதல் என்று
முத்தம் தந்தேன் ஏன் தலையில் நான் பூ
வைப்பதில்லை அதனால் இந்த நாம்
காதல் பூ உன்னிடமே இருக்கட்டும் என்று
திரும்பி தருகிறேன் இதை ஏன் காதல்
பரிசாய் ஏற்றுக்கொள்வாயா என்றாளே
நான் காதல் அதிர்ச்சியில் ஆடிவிட்டேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Feb-19, 9:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 446

மேலே