வாழ்க்கை

இறைவன் தந்த இந்த உடல்
பிறக்கையில் வள மண்போல்
முற்பிறவியில் செய்த வினையால்
அவ்வுடலில் வந்தணையும் நன்மையும்
தீமையும் , மண்ணில் மண்புழுவும்
களையும் , காளானும்போல
'விதையையும் மதியால் வெல்லலாம்'
என்பர் , நம் மதியால் பாலிலிருந்து
நீரைப் பிரிக்கும் அன்னம்போல்
நம்மை வந்துருத்தும் தீய எண்ணங்களை
பொங்கிவரும் அகந்தை, காமத்தீ ஆதி
களைகளை, விட காளான்களை
களைந்து விட்டெறிவோமாயின் , பின்
இந்த வளமான போல் உடலை
வந்தடையும் நல்லனவெல்லாம்
நமக்கு நலம்தந்து வாழ்க்கையில் ஏத்திவிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Mar-19, 9:22 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 562

மேலே