அன்பே கடந்து போகாதே

இதழ்கள் நான்கும் மோதும்...
பொங்கும் இன்ப அலையில்
இதயம் கொஞ்சம்
நனையுமே...

முகவரி தேடி வானிலே
பறவைகள் சிறகை விரிக்குமோ...
உன்னில் கலந்திட நானுமே
பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமோ...

தீயுனுள் குளித்து வேர்க்காமல்
தங்கம் இங்கு ஜொலிக்குமோ...
என்னைக் கடந்து போகையிலே
எந்தன் ஜென்மம் நிலைக்குமோ?

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (26-Mar-19, 6:39 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 1368

மேலே