பெண்ணாகிய
என்
படிப்புத்தேர்வும்
வாழ்க்கைத்தேர்வும்
பெற்றோர்களுக்கானது......
என்
பகிர்தலும்
விட்டுக்கொடுத்தலும்
தம்பிகளுக்கானது.....
என்
தேகமும் மோகமும்
கணவனுக்கானது......
என்
பொழுதுகளும் கனவும்
குழந்தைகளுக்கானது.....
எனில் எப்போது
நான் எனக்காவது???????