வானத்தில் ஒரு திருவோடு
வானத்தில் நிலவின் கீற்று
பிச்சைக்காரன் திருவோட்டைப் போன்று.....
வானத்தின் நிலவை எழுதவா
வறுமையை எழுதவா என்று இதயத்திடம் கேட்டேன் !
முழுதானதும் வானத்து நிலவை எழுது
இப்பொழுது கையில் இருப்பதை
இவன் திருவோட்டில் போடு
என்று விடை பெற்றது இதயம் !