தீண்டாமை

கருவறை இருட்டில்கூட
கவலை இல்லாத ஓர் உற்சாகம்
பயணம் தெரியாமல்
அதன் பாதை புரியாமல்
ஜனத்தின் வழி பாதையில்
ஓங்கி ஒலித்த சிசுவின் சிறு குரல்
கள்ளி பாலே வைத்து கொன்று விடு
இந்த சாதிய விஷத்தில் பிறப்பதை விட
மீண்டும் ஒரு முறை சந்தோஷமாக செத்து பிறக்கிறேன் ....
சாதியம் இல்லா சாத்தியம் காண ........

எழுதியவர் : செந்தில் குமார் அ (8-May-19, 3:34 pm)
சேர்த்தது : sendil
Tanglish : THEENDAMAI
பார்வை : 1265

மேலே