ஏன் இந்த மௌனம்
ஏன் இந்த மௌனம்😢😢😢
உன்னை நினைத்து ஏங்கும் என் மனம்
ஒரு நொடியேனும் உன்னை மறவாது
கண்ணே....
மறந்தால் அந்நொடி உயிர்போகும்
அன்பே.....
காரணம் தெரியாத புதிராய் -
உன் நிசப்தம்
என் உள்ளத்தை வருடுகிறதே!
உன் காதலுக்காக ஏங்குகிறதே!
ஏக்கங்களை மறைக்க முடியும்
இருப்பினும் கண்ணீரை
மறைக்க இயலவில்லை
கேட்கிறேன் மீண்டும் உன்னிடம்
ஏன் இந்த மௌனம்😭😭😭