காதல்

உன் மதிமுகத்தைக் கண்டேன் அதில்
செந்தாமரையின் பொலிவு கண்டேன்
உன் அழகில் என்னை இழந்தேன் என்
எண்ணமெல்லாம் உன்மயமாகிவிட
உன்னோடு உன் அழகோடு உறவாட
எண்ணமிட்டேன் உன்னோடு பேசினேன்
நெருக்கம் வந்தது பழக்கத்தில் தெளிவானது
உந்தன் உடலகின் பின் இருக்கும் மனத்தின்
அழகு , உன் உடல் அழகின் மீதிருந்த மோகம்
குறைந்தது உன்மீது எனக்கோர் அலாதி அன்பு
வந்தது இனம் தெரியா பாசம் தந்து முடிவில்
புரிந்துகொண்டேன் உன்மீது காதல்
எனக்கு வந்ததென்று நீ ;அன்பே' என்றழைத்தபோது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jun-19, 12:14 pm)
Tanglish : kaadhal
பார்வை : 211

மேலே