தினந்தோறும் அரணாவான் நாரணனே

காண கண் கோடி வேண்டும்..!!
கண்டுவிட்டேன் என் காலம் முடியும் முன்..!!
24-ம் வயதில் காட்சி தந்துவிட்டார்..!!
அடுத்து.. என்ற பேச்சிற்கே இடம் வேண்டாம்..
ஆயுளும் வேண்டாம்..!!
போதும் எதிர்பார்ப்பையோ ஆசையையோ ஆயுளில் வைக்காத மனிதர்களுள் நானும் ஒருத்தி..!!
கடமைகளை சுமக்கத் தொடங்கும் முன்
காட்சி தந்து காத்துவிட்டார்..!!
கடந்த ஐந்து மணி நேர நீண்ட நடை பயண களைப்பிற்கு..
ஒரு கணத்தில் கடாக்ஷம் தந்து..
களைப்பை களிப்பாய் மாற்றினார்..

மடைதிறந்த வெள்ளம் போல் மக்கள் கூட்டம்..
கடைகண்கள் களிப்பாற காட்சி தந்த..
திடத்தோளன் மலர்பாதம் பணிவோமாகில்..
தினந்தோறும் அரணாவான் நாரணனே..!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (11-Jul-19, 8:53 am)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே