தனிமை
உள்ளிருக்கும் என் எண்ணங்களை
சொல்லிக்கொள்ள ஓர் சொந்தமில்லை
முள்ளிருக்கும் என் பாதையிலே
அள்ளிக்கொள்ள ஓர் பந்தமில்லை
நாளும் நான் பாடும் சோகம் தீராதோ
மேலும் எனைக் கொல்லும் காயம் ஆறாதோ
தனிமையே என்றும் துணை என
வாழ்ந்திடும் ஒரு ஜீவன் நான்
யார்யார்க்கு எதுவென்று யார் சொல்வது
விதி என்ற சதிதன்னை யார் வெல்வது
தீராத சுமைதானோ என் வாழ்க்கையே என் வாழ்க்கையே