மனம் உன்னை வெறுக்குதே

வசந்த காலம் தொலைந்ததே
உலகமே வெறுத்ததே
உள்ளமோ உருகுதே
உறுதியில்லா இவ் வாழ்வை
நாடுமா என் மனம்

காலங்கள் கடந்ததே
கவலைகள் மிகைத்ததே
உறவுகள் தொலைந்ததே
பணம் ஒன்றே உயர்ந்ததே
மனைவியைத் துறக்கிறான்

பதவியை பிடிக்கிறான்
குழந்தையை புதைக்கிறான்
புகழ் நிலை பெறுகிறான்
அழகிற்க்கு பணிகிறான்
அதை தினம் அடைகிறான்
மகிழ்ச்சியில் மிதக்கிறான்
மதுவையும் குடிக்கிறான்

ஆணவம் கொண்டவன்
ஆட்சியை நடத்துறான்
ஊரவர் உரைக்கிறார்
உற்றவன் கொடுமையை
நிம்மதி இனி இல்லை
நிலையில்லா இம் மனிதரை
மனம் உனை வெறுக்குதே
மனைவி எனும் பதவியைத் துறக்கிறேன்
துயரிலா வாழ்வைதான்
உள் மனம் விரும்பிட்டே......

எழுதியவர் : அஸ்லா அலி (8-Aug-19, 3:45 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 135

மேலே