பச்சை மேனிக்காரி

பச்சை மேனிக்காரி 🔥

பச்சை புடவை கட்டி கொண்டு பவனி வந்து
பாவைக்குக்கு
இன்று பேராபத்து.
அவள் சில துரியோதனன்கள் செய்த சூழ்ச்சியால் அவள் உடல் முழுவதும் நெருப்பில் பற்றி எரிகிறது .

ஆபத்பாண்டவா, அனாதை ரட்சகா, அகில உலகை ஆளும் மண்ணா, எல்லோரும் வணங்கும் கண்ணா!
மணிவண்ணா!
அமேசான் மங்கை அழுகுரல் உனக்கு கேட்வில்லையா?
அன்று பாஞ்சாலி துகில் உரியும் போது, அவளின் அபைய குரல் கேட்டு, உடனே ஆதரவு தந்தாய்.
அவளின் மானம் காத்தாய்.
இன்று இந்த பச்சை மேனிக்காரியின் அழகு கொள்ளை போகிறது.
ஓடு கண்ணா ஓடு
விரைவில் ஓடு.
மழை மேகமாய் திரண்டு
பொழிந்து தள்ளிவிடு மழையாய்.
முட்டாள்களின் மூர்க்கதனத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடு.
- பாலு.

எழுதியவர் : பாலு (25-Aug-19, 11:13 am)
சேர்த்தது : balu
பார்வை : 237

மேலே