மாலைப் பொழுதின் மயக்கத்திலே

மாலைப் பொழுதின் மயக்கத்திலே /
மடி சாய்ந்திடவே ஏக்கம்
எழுகின்றதே மனதினிலே /
மாமன் வாழும் பெண் நெஞ்சமே /
மயக்கம் ஏக்கமானதோ? சொல் நெஞ்சமே /

சோலைக்குயிலும் சோடியோடு கூவிட /
மதுரை மல்லிகையைக் கிள்ளிப் பார்க்க வரும் பொன்வண்டும் இணையோடு வட்டமிட /
தனிமைக்குத் துணையென்று
தென்றலும் மரக்கிளையைத் தொட்டு விலக /
கட்டை விரல் பிடித்த படி
பக்கவாட்டில் ஒரு சோடி உலாவ /

ஆசை உள்ளம் மோக வெள்ளத்தில் விழ/
விழிகளிரண்டும் துழாவுகின்றது
அன்பான நாயகன் எங்கேயென /

இ.சாந்தா

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (22-Sep-19, 7:26 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 143

மேலே