நெகிழ்ந்து நிறைவு கொண்ட

அருகு துளிர்த்து ஆழ வேர் விட்டு
பெருகி பல பிணித்தீர்த்து பேணும்
அரிய நிகழ்வு நிறைவேறும் புவியில்
அற்புத மனமுடைய மாந்தரின் பால்

நெகிழ்ந்து நிறைவு கொண்ட இயற்கை
நிரம்ப நன்மை செய்ய நெறி வார்த்தைக் கேட்டு
உருகி அழைக்கும் போது உற்சாகமாய்
உலகினில் உருகி பொழிந்து உணவாகுவது போல்

பழகி பாடுபட்டு உள்ளம் உடல் சோர்ந்து
உள்ளதைக் கொடுத்து உயரே தூக்கி விட்டு
உடன் உள்ளோர் பழி வார்த்தை தொலைத்து
உற்ற நண்பனுக்கு உதவிடும் செயலை

உயரே சென்றபின் உதாசினப்படுத்தும் போது
உயிர் நண்பனே ஆனாலும் உள்ளம்
உள்ளபடி நொந்து ஒரு நொடி வருந்துங்கால்
உருக்குலைத்து விடாதோ வளர்ச்சியை மனம்

அரும்பணி செய்து கிடைக்கும் பெருமையை விட
அன்பால் அரவணைத்து அறிவால் அறியாதவருக்கு
அவர்பால் நாட்டங்கொண்டு அறிவை விதைத்து
அகத்தில் ஒளியேற்றின் அதுவே தேவ அமிர்தமாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Sep-19, 7:42 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே