தென்காசி
என்
எல்லையை
நெல்லையிலிருந்து
பிரித்துவிட்டார்கள்!
வேலியிட்டு
காத்தாய்
எங்களை
ஒற்றைப்பெயரினில்!
இன்று
வேலியை
தாண்டி
வந்துள்ளோம்!
இக்கணம்
வரையிலும்
நெல்லை
என்றே
உரைக்கிறேன்
என்னை
அறியாமல்!
பிரிந்தவுடன்
மறப்பதற்கு
நேற்று
பூத்த
உறவாநீ!
வரலாற்று
காவியமன்றோ
நீ!
நெல்லையே
உன்னைவிடுத்து
வரலாறுண்டோ!
பெறுவதைகாட்டிலும்
இழப்பது
கொடிது
நெல்லையே
உன்
வலியை
உணர்கிறேன்!
உன்
வரலாற்றில்
எனக்கும்
இடமுண்டு!
இன்று
என்னை
ஈன்றெடுத்துவிட்டாய்!
உன்
புகழ்
குன்றாது!
எதிர்கால
வரலாற்றில்
சரித்திரம்
படைக்க
இன்று
முதல்
உதயமாகிறேன்
தென்காசியாக!