எங்கு தான் சென்றாயோ

நெஞ்சை தயிர் மத்தாய்
கடையுதடி உன்நினைவு
கடல் அடியில் முத்தாய்
நான் கண்டெடுத்த பேரழகே
உரலில் நெல் குத்தாய்
ஆக்கிவிட்டுச் சென்றாயே ஏன்?
காணாமல் உன்னை பித்தாய்
இங்கு அலைகிறேனடி நானே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Dec-19, 4:41 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 115

மேலே