வாசம் கொண்ட வெண்ணிலவே 555

***வாசம் கொண்ட வெண்ணிலவே 555 ***


என்னழகே...


நாம் பிறந்த ஊரில் நான்
கண்ட
இன்பம்தான் எத்தனை...



தென்னந்தோப்பில்
ஆடும் மயில்கள்...



ஆற்றோரம் நான்
உறங்கும்
நாணல் நிழல்...



அக்கரையில் நீயும்
இக்கரையில் நானும்...



நீச்சல் போட்ட
நம்ம ஊர் குளம்...



தினம் தினம் உனக்காக
நான் காத்திருந்த அரசமரம்...



என் வீட்டை நீ
கடக்கும்
போதெல்லாம்...



இசைமழையாக
உன்
கொலுசின் ஓசைகள்...



நம் தாய்நாட்டில் உன்னை
என் தாரமாக நேசித்தேன்...



இன்று அயல்நாட்டில்
உன்னை நினைத்து...



தினம் தினம்
நான்
வாடுகிறேன்...



உன்னை நான் எப்போது
நம்
தாய்நாட்டில் சந்திப்பேனென்று...



ஒவ்வொரு நாட்களையும்
யுகமாக கடக்கிறேன் நான்...



என்னுயிரே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (15-Dec-19, 8:08 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 777

மேலே