அழைத்தேன் வரவில்லை

அழைத்தேன்,
வரவில்லை

மிரட்டினேன்,
பணியவில்லை

கெஞ்சினேன்,
பலனில்லை

சாட்டை எடுத்தேன்,
சட்டை செய்யவில்லை

விலகிப் போகிறது,
பிரிய நினைக்கிறது

கற்பனை குதிரை ,
கையில் அகப்படாமல்

சிந்தனைத் துளிகள் ,
சிதறுண்டு வீணாகிறது

எடுக்கவும் முடியவில்லை,
எழுதவும் முடியவில்லை

சேமிக்கவும் இயலவில்லை,
சேர்த்தவையும் காணவில்லை !

பழனி குமார்
11.01.2020

எழுதியவர் : பழனி குமார் (11-Jan-20, 7:48 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 487

மேலே