அல்வா டைம்ஸ் செய்திகள்

மத்திய மண்ணாங்கட்டி துறை அமைச்சர் சாஸ்தா நிகோலா நேற்று மண்ணாங்கட்டி பற்றிய சிறப்பு ஆய்வுக்கூட்டம் ஒன்றிற்காக விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
அமெரிக்காவில் போக்யார்க் எனும் மாகானத்தில் பல நாடுகளை சேர்ந்த முக்கிய மந்திரிகள் கூடி நடத்திய கட்டமேசை மாநாடு என்னும் புதியவகை ஆய்வுக்கூட்டத்தில் பலமணி நேரம் மண்ணாங்கட்டியை பற்றி அனைவரும் ஆய்வு செய்தனர்.
பல மணி நேரங்களுக்கு பிறகு மண்ணாங்கட்டி என்ற பொருள் மண்ணிலிருந்துதான் உருவானது என்பதை உறுதி செய்து அனைத்து நாட்டு மந்திரிகளும் ஒப்பந்தத்தில் கைநாட்டு வைத்து முடிவு செய்தனர்.
ஆய்வுக்கூட்டத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என 4 வகை மொழிகளில் சாஸ்தா நிக்கோலா உரையாடி பல நாடுகளை சார்ந்த மந்திரிகளை திக்குமுக்காட வைத்தார்.
அவரின் அறிவுக்கூர்மையை பாராட்டி மண்ணாங்கட்டி மாலையை அணிவித்து கவுரவபடுத்தினர் ஆய்வுகூட்டத்தினர்.
அதன் பிறகு விமான வொய்ட் பெட்ரோல் அலவன்ஸ் பெற்றுக்கொண்ட சாஸ்தா விமானம் மூலம் மீன்டும் இந்தியாவுக்கு புறப்பட்டார்.
திடீரென்று விமானம் நடுவானில் நின்றுபோக சாஸ்தா உள்ளிட்ட கூட்டணி அலறிப் போனது.
விமானம் ஸ்டார்ட் ஆகாத காரணத்தினால் மூன்றுபேர் விமானத்தினை நடுவானில் கீழே இறங்கி தள்ள நேர்ந்தது.
சுமார் 3 மணி நேர போராட்டங்களுக்கு பின் விமானம் ஸ்டார்ட் ஆகி புறப்படத் துவங்கியது.
அதன் பின் சாஸ்தா பாதுகாப்பாக நாடு வந்து சேர்ந்தார்.
விமானத்தை பரிசோதனை செய்த பொறியாளர் அணி விமான சக்கரத்தில் மண்ணாங்கட்டி மாலை சிக்கியிருப்பதை கண்டறிந்தனர்.
அதுவே விமானம் நின்றுபோக காரணம் என்றும் கருத்து கூறினர்.
மேலும் பைலட் கூறியதாவது
"மந்திரி அவர்கள் வரும் வழியில் காசை மிச்சப்படுத்துவதற்காக வொயிட் பெட்ரோலுக்கு பதிலாக டீசல் போடச்சொல்லி என்னை மிரட்டினார். அதனால் நான் டீசல் ஃபில் செய்து விமானத்தை எடுக்க நேர்ந்தது.
இதுதான் விமானக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம்" என்றார்.

எழுதியவர் : (26-Feb-20, 7:44 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 49

மேலே