காதல் ♥️♥️

காதல்🌹

காட்டு வழி போற என் கண்ணே!
நானும் உன் காவலுக்கு துனைக்கு வரவா?
மச்சான் என் கூட நீ வர எனக்கு சம்மதமே.
ஆனா ஒரு கண்டிசன்.
நீ என் கூட வந்தா சுல்லிய நீ தான் பொறுக்கனும்.
அப்படின்னா வா!
சுல்லி என்ன சுல்லி
அந்த காட்டு மரத்தையே வெட்டி தரேன்.
இந்த வீராப்புக்கு ஒன்றும் கொறச்சல் இல்ல.
உன் மச்சான் ஆம்பள சிங்கமடி.
அதோ மான் துள்ளி குதித்து ஓடுது
பிடிச்சு எனக்கு தாயேன்.
அந்த மானை நான் ஏன் பிடிக்கபோரேன்.
நீயே எனக்கு துள்ளி ஓடும் மான் தானே.
நல்லா தான் பேச கத்துக்கினே!
உன் மாதிரி அல்வா துண்டு அருகே இருக்கையிலே நான் பேசலன்னா எப்படி.
பேச்சல்லாம் நல்லா தான் இருக்கு.
என்னடி சொல்ல வர.
கன்னாலம் வரை யோசிக்கிறியே.
என்ன கடைசிவரை கஞ்சி ஊத்தி என்னைய காபாத்துவாயா.
நான் ஒழுங்கா வேலைக்கு போலேன்னு சொல்லாமல் சொல்ற.
பின்ன உன் ஆத்தாகாரி எப்படி பொலம்பறா தெரியுமா.
அது அப்படி தான் சொல்லும்.
உன் கழுத்துல மூனு முடிச்சு போட்ட பிறகு பாரேன் அய்யாவ.
தோ இப்பவே தெரியுதே.
சுல்லி பொறுக்கையிலையே கை என்னமா நடுங்குது.
அந்த சாராய கருமத்த ஏன் குடிக்கிற.
என்னடி ரொம்ப பேசர.
என்ன வேலையத்தவன் நினைச்சுட்டியா.
நீ என்ன பேழகியா.
போன வாரம் கரகாட்ட கோஷ்டியில ஒரு சிவத்த குட்டி பாத்தேன்
அவளுக்கு நீ ஈடு அகுவியா.
ஏன் நம்ம பயலுக ஒன்னா சேந்து போன மாசம் ரிக்கார்டு டாண்ஸ் ஏற்பாடு பண்ணாங்க
அதுல ஒருத்தி கருப்பா இருந்தா கூட செம கட்டை.
அதானே பார்த்தேன், நீ திருந்திட்டன்னு நினைச்சேன், என்னை செருப்பால அடிச்சிக்கனம்.
நான் தான் அழகே இல்லாதவளாச்சே
அப்ப ஏன் கூட இவ்வளவு தூரம் வந்தியாக்கும்.
அப்ப நீ செத்த முன்னாடி பேசியது எல்லாம் டூப்பா.
என் ஆத்தா அப்பவே சொன்னா
அவனை நம்பாதடின்னு.
நான் தான் பைத்தியகாரி
மனசுலு உன்னை நினைச்சு....( அழுகிறாள்)
போ... அந்த கரகாட்டகாரி கிட்ட
சிவத்த மூச்சியாமே...
ஏன் போயேன்...
அந்த ரிக்கார்டு
டாண்ஸ்காரிகிட்யும்...
செம கட்டையாமே...
நல்லதுக்கும், கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாத... கூமுட்டை .

புள்ள, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா
இப்படி நெருப்பா கொதிக்கிற.
உன் சமாதானம் எனக்கு வேனாம்.
சரி புள்ள, நாளையில் இருந்து கண்டிப்பா ஏதோ ஒரு வேலைக்கு போரேண்டி.
போதுமா.
அது மட்டும் போதாது
அப்புறம்.
சாராயம்.
உன் மேல சத்தியமா
குடிய நிறுத்தறேன்.
ஏய், புள்ள நீ ரோம்ப அழகா இருக்கடி
எப்படி நம்ப கன்னாலம்.
நாளைக்கே பண்ணிக்கலாமா.
நான் ரெடி.
மச்சான் நீ எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அப்ப இப்ப ஒரு உம்மா கொடேன்.
அஸ்க்கு , புஸ்க்கு அது முடியாது தம்பி.
மச்சான் உன் வருங்கால பெண்டாட்டி ஏழை தாண்.
ஆனா நெருப்பு.
மூனு முடிச்சு என் கழுத்துல கட்டு
என்ன முழுசா கட்டிகோ
நீ முன்னால் போ மச்சான்.
நான் நிழலா பின்னாடியே வரேன்.
- பாலு.

எழுதியவர் : பாலு (3-Apr-20, 8:45 pm)
சேர்த்தது : balu
பார்வை : 323

மேலே