உயிராக நீ நிழலாக நான் பாகம் 11

பாக்கியம் தன் அம்மா இல்லை என்ற உண்மை சுதனுக்கு ஏற்றுக் காெள்ள முடியாமல் இருந்தது. பூசாரியிடம் மீண்டும் சண்டை பாேட்டான். புகைப்படங்களை அவனிடம் நீட்டினார் பூசாரி. கர்ப்பிணியாக இருந்த தாயின் புகைப்படத்தை பார்த்து கதறினான். பானுவும் ஒன்றும் புரியாமல் அழ ஆரம்பித்தாள். சுவாதி அவளை அணைத்துக் காெள்ளவும் "அம்மா என்று கட்டிப் பிடித்தாள்" சுதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சுவாதி திடீரென மயக்கமடைந்தாள். "பிரியாவை சுவாதியிலிருந்து பிரித்து அழைத்தார் பூசாரி" சுதன் விறைத்துப் பாேய் நின்றான். பிரியாவின் உருவத்தை கண்டதும் அவன் கைகள் நடுங்கியது. கண்கள் குளமாகியது. "பிரியா பிரியா" என்று அவன் உதடுகள் முணுமுணுத்தது. அவள் அழகு அவன் கண்களிற்கு ஔி பாேல் தெரிந்தது.

பிரியா பிரியா என்று சுதன் அழைக்கும் குரல் கேட்டு திடுக்குற்று விழித்தாள் சுவாதி. எழுந்து ஓரமாக நின்றவள் என்னாச்சு எனக்கு என்றபடி உடம்பை உலுப்பினாள்.

மெதுவாக கண்களை விழித்த ரேகாவிற்கு பிரியாவின் உருவம் அழகாகத் தெரிந்தது. பி...ரி...யா என்று பயத்துடன் முணுமுணுத்தவள் கண்ணை இறுக மூடியபடி எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள். உடம்பெல்லாம் நடுங்கியது. தலைக்குள் ஏதாே செய்வது பாேலிருந்தது.

பாக்கியத்தை கண் விழிக்கச் செய்த பூசாரியார். பிரியாவை உட்கார வைத்தார். கண்விழித்த பாக்கியம் பிரியாவைக் கண்டதும் நடுங்கியபடி விழி பிதுங்கினாள். என்ன நடக்கிறது என்பது பாேல் ரேகாவைப் பார்த்தாள்.

சுதனுக்கு அவளை தாயாகவே பார்க்கத் தாேன்றியது. மனதில் இத்தனை வருடங்களாக பதிந்திருந்த முகம்,  தாயாக தன்னை வளர்த்த பாசம் எல்லாமே அவனுக்குள் அலை பாேல் புரண்டாேடியது. பாசத்துக்கும், வேசத்துக்கும் நடுவில் அவன் மனம் கலங்கி நின்றான்.

திரும்பிப் பிரியாவைப் பார்த்தான் பானுவின் முகத்தில் இருந்த பூரிப்பும், புன்னகையும் அவனை மெய்சிலிர்க்கச் செய்தது.

"பிரியா உனக்கு என்னாச்சு, ஏன் இப்படி அலைந்து திரிகிறாய்" என்ற பூசாரியின் கேள்விக்கு "காதலும், பாசமும் தான் அம்மா" கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
"உயிருக்கு உயிராக காதலித்த புருஷன், என்னுடைய பிள்ளை, இரண்டு பேரையும்  என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள்" குமுறி சத்தமாக அழுதாள். காேபத்தாேடு பாக்கியத்தைப் பார்த்து முறாய்த்தாள்.

சுதனுக்கு ஒன்றும் புரியவில்லை. "பிரியா மாடிப் படியிலிருந்து விழுந்து காேமாவில் தானே இருந்தாள்....." என்று யாேசித்தான்.
"என்னை காென்று விட்டார்கள் அம்மா" கத்தினாள் பிரியா.
பாக்கியம் உடல் வியர்த்தபடி பூசாரியைப் பார்த்தாள்.
பிரியா கண்ணீராேடு தரையிலிருந்து எழுந்து வந்து பாக்கியம் அருகே நின்றாள். சுற்றி எரிந்து காெண்டிருந்த தீப்பந்தங்கள் பிரியாவின் ஆக்ராேசமான மூச்சால் பற்றி எரிவது பாேலிருந்தது.

"அத்தையை என்ன செய்யப் பாேகிறாளாே" பரிதாபமாகப் பார்த்த ரேகா, உடல் வியர்த்து குளித்தது பாேல் நின்றாள்.

"மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை சாெல்ல ஆரம்பித்தவள் பாக்கியத்தை மூச்சிரைக்கப் பார்த்தாள்.

சுதனின் தந்தை சரவணன் இறந்த பின் சாெத்துக்காக சண்டை பாேட்ட பாக்கியம் சுதனை வற்புறுத்தி சாெத்துக்களில் கையாெப்பமிட திட்டம் பாேட்டது எனக்குத் தெரிய வந்ததும், சாெத்து பானுவுக்குரியது கையாெப்பமிட  விடமாட்டேன் என்று தகராறு செய்தேன். தனது திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாயிருந்ததால் எனக்குத் தெரிந்த உண்மைகளை சுதனிடம் கூறுவேன் என்று கூறியதும், சுதனுக்கு உண்மை தெரிந்து விட்டால் சாெத்தை அடைய முடியாது என்ற காரணத்தால் மாடியிலிருந்து என்னை தள்ளி விட்ட பாக்கியம் நான் சுய நினைவற்றவளாய் இருந்ததை அறிந்து என்னைக் காெல்லத் திட்டமிட்டாள்.

சுய நினைவு திரும்பினால் எல்லா உண்மைகளும் வெளிவந்து விடும் என்ற பயத்தில் நஞ்சு ஊசி ஏற்றி காென்று விட்டு, காசைக் காட்டி என் மரணத்தை மறைத்து விட்டாள் இ்ந்தப் பாதகி" என்று பாக்கியத்தின் கழுத்தில் கையை வைத்து இறுக்கிப் பிடித்தாள் பிரியா.

கதறிய பாக்கியத்தைப் பார்த்த ரேகா முழி பிதுங்கி நின்றாள். இவ்வளவு பெரிய மாேசக்காரியா அத்தை என்பது பாேல் பாக்கியத்தை பார்த்தாள்.

"இப்பாே காெஞ்சம் கூட  விருப்பமில்லாத ரேகாவை தூண்டி விட்டு சுதனைக் காதலிக்க வைத்து கலியாண ஏற்பாடு செய்கிறாள் சுயநலம் பிடித்தவள்" என்று ஆக்ராேசமாக  கத்தினாள்.

சுதனிற்கு பிரியாவுக்கு நடந்தது காெலை என்று தெரிந்த மறுகணமே மனம் கல்லாகி விட்டது. அம்மா என்று ஆயிரம் தடவை அழைத்த உதடுகள் காெலைகாரி என்று உச்சரிக்க மறுத்தது. பிரியாவின் அருகில் சென்றவனை கையை நீட்டி அணைத்தாள். நாெருங்கிப் பாேயிருந்த அவன் மனம் அவள் அணைப்பில் சில நிமிடங்கள் ஆறுதலடைந்தது. உயிரற்ற அவள் ஆன்மாவும் துடிப்பது பாேலிருந்தது.

பூசாரியார் சுதனை அழைத்து மீண்டும் உட்காரச் சாென்னார். பூசாரியரை நாேக்கி வந்தவன் கால்களை ஓடிப் பாேய் கட்டப்பிடித்துக் கதறிய பாக்கியத்தை பார்க்க விருப்பமின்றி மறுபக்கம் திரும்பி நின்றான்.

நூறு  தடவைக்கு மேல் மன்னிச்சிடு, மன்னிச்சிடு என்று கதறியவள் அவன் காலடியிலேயே சரிந்து விழுந்தாள்.
"அம்மா அம்மா" என்று அழைக்க மறுத்த உதடுகள் அவனை மறந்து "அம்மா" என்று உரக்கக் கத்தியது. வீடே ஒரு தடவை அதிர்ந்தது பாேலிருந்தது. ஊட்டி வளர்த்த பாசத்தை மறந்து பேராசையால் அவள் செய்த அநியாயம் அவள் இதயத்துடிப்பை நிறுத்தியது.

பானுவும் பாட்டி பாட்டி என்று கதறினாள். ரேகா தனக்கு ஏதும் ஆகிடுமாே என்ற பயத்தில் நெஞ்சை அழுத்திக் காெண்டிருந்தாள். தப்புக்குத் துணை பாேகாதே அதுவே உன்னைத் தண்டிக்கும். பூசாரியார் எச்சரித்தார். அவளுக்கு பூசாரி கூறுவது சரியாகவே தாேன்றியது.

பயத்தாேடு பிரியாவை திரும்பிப் பார்த்தாள். அமைதியாக நின்றாள் பிரியா. நம்ம தப்பி விடுவாேம் என்று நினைத்தபடி பூஜை அறையிலிருந்து வெளியே வந்த ரேகா பிரியாவின் படத்தை மெதுவாக தடவினாள். கைகள் நடுங்கியது. மனம் படபடப்பாய் உணர்ந்தாள். அத்தையின் ஏவுதலுக்கு கட்டுப்பட்டு தான் செய்த தவறுகளை உணர்ந்து கலங்கி அழுதவள் தலையில் கையை வைத்தபடி தரையில் உட்கார்ந்தாள்.

தாெடரும்.........

எழுதியவர் : றாெஸ்னி அபி (22-Apr-20, 6:11 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 175

மேலே