பாதசாரிகள்
வந்தாரா வாழ வைக்கும் பூமிக்கு
வயசாகிப்போயிடுச்சோ .....
வறுமை எனும் வலி ஓட வடக்கே வழி காட்டுது எனோ ??
பலநூறு கோடி ரூவா சாலைகள்
பாதை யாத்திரைக்கோ ??
பயணத்துக்கு பக்க துணை பசியும் பட்டினியுமோ ??
பஞ்ச ம் பிழைக்க வந்த மக்க பாதந் தேயுறது பாரத மாதாவுக்கு தெரியலயே ??
மனிதம் தொலைஞ்ச நாட்டுல மாமனித பதாகைகள் பல்ல காட்டுதய்யா ???