குறைவில்லா அன்பாலே
ஒட்டைப் பைக்குள்,
உணர்வுகளின் கூட்டம்!
அடிமுடி அறியமுடியா
அண்டத்தையே,
அடக்கியாள அலைகிறது!
அழிவுகளை அறியாமல்,
அன்பால் நிறைந்தோரே!
அறிந்திடுவீர்! உண்மையை,
அற்ப ஆயுள் உள்ள
அற்புத வாழ்வில்,
ஆனந்தம் அடைந்திடுவீர்!
குழந்தையைப் போல
குறைவில்லா அன்பாலே!