முகநூல் பதிவு 52

எதிலும் தொலைநோக்குப் பார்வை....
சீர்தூக்கிப் பார்க்கும் திறம் ..
அனைவரிடமும்
பாகுபாடின்றி பழகும் குணம்....
அடுத்தவர்கள் திறமையை மனம் திறந்து பாராட்டும் மனம்....
எல்லாவற்றிலும் ஒரு நேர்மறை சிந்தனை.....
படபடப்பில்லா பக்குவமானப் பேச்சு....
சொல்லும் கருத்தில் துணிவு....
சொல்லும் வரிகளில் தெளிவு...
மேற்கொள்ளும் காரியங்களில் வீரியம்
நிறைவேற்றும் விதத்தில் விவேகம்....
அனைத்துக்கும் ஒரே உரிமை பத்திரக்காரர்
அன்புத் தோழமை பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்கள்...
இந்த முகநூல் தந்த நல்நட்புப் பொக்கிஷம்...!

நாளை பிறந்தநாள் காணும்
இந்த எழுத்துலக மார்கண்டேயன் அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீண்ட ஆயுளும்
நிறைவான செல்வமும் பெற்று
உற்றத் துணையுடனும்
உதிர உறவுகளுடனும் இணைந்து இன்புற்று
வாழ்வாங்கு வாழ
இறைவனிடம் வேண்டுகிறேன்!

எழுதியவர் : வை.அமுதா (29-Jul-20, 7:25 pm)
பார்வை : 34

மேலே