காத்திருந்த என் விழிகள் செந்நிறமானது 555

என்னுயிரே...


உன்னுடன் நான் சில நாட்கள்
பேசி சிரித்து இருந்தாலும்...

சில நிமிடங்களே ஆகும்...

உண்மை அன்பு
எங்கு சென்றாலும்...

உன்னை தேடி
வரும்
என்றார்கள்...

நீயும் வந்தாய் நான்
தேடாமலே என்னெதிரில்...

உன் இரு புருவத்தின்
மத்தியில்
வைத்த பொட்டும்...

விரால் மீன்
போல்
உன் விழிகளும்...

நான் ரசித்த
ஆரஞ்சு இதழ்களும்...

மல்லிகை மொட்டின்
மேல்
சிறு மூக்குத்தியும்...

சங்கு கழுத்தில் உனக்கு
பிடித்த தங்க சங்கிலியும்...

சிவந்த ஆப்பிள்
கன்னங்களும்
கண்டு ரசித்தேன்...

நீ என்னவள் என்று...

உற்று நோக்கினேன்
நான்
தள்ளி நின்றேன்...

நீ என்னுயிர்
இல்லையென்று...

உன் நேர் வகிடில்
குங்குமத்தை கண்டதும்...


காத்திருந்த என் விழிகள்
செந்நிறமானது நீ எவளோ என்று.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (18-Aug-20, 6:54 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 657

மேலே