தரம் ஏற்றி, சிரம் தாழ்த்தி

ஊருக்குள் உலகுக்குள்
உண்மைக்குள் ஒருமொழி
நகர்ந்து செல்லும்
நாகரீகம் பெருமையும்
பெரும் பேறும் அல்லவா/
தன்னபிக்கை கொண்ட
தமிழன்
தனித்துவம் மிக்கவன்
நாடு, நகர், ஊர் தோன்றும்
காலகட்டம் அதில்
தமிழ் தோன்றி, தான் வேரூன்றி
அகிலம் முழுதும்
அன்பை பண்பை விதைத்து
தனக்கு நிகர் தானே
என
வீறு கொண்டு எழுச்சி கண்டு
அடர்ந்து படர்ந்து வாழும்
நம் தமிழை
தரம் ஏற்றி, சிரம் தாழ்த்தி
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Sep-20, 11:03 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 137

மேலே