ஆன்றோர் சொல்
நல்ல நட்புடன் பழகுங்கள்
நெருங்கி பழக வேண்டாம்
நெருக்கங்கள் அலட்சியத்தை
உருவாக்கி அமைதியை கெடுக்கும்
அளவுடன் பேசுங்கள்
காரணமின்றி பேச வேண்டாம்
சில சமயங்களில் நல் நோக்கமுள்ள
வார்த்தைகளும் களங்கப்பட்டு
பிரிவினைக்கு வழிவகுக்கும்.
வாழ்க்கையில் எதுமே அளவுக்கு
அதிகமானால் விஷம் என்ற
ஆன்றோர் சொல்லின் அர்த்தம்
இப்போது புரிகிறது...!!
--கோவை சுபா