சொல்லத் துடிக்குது மனசு

வண்ண உடை கலக்களடி.
அன்ன நடை மயக்குதடி.
சின்ன இடை இழுக்குதடி.
கண்ணாடிக் கண்கள் போதை ஏற்றுதடி.

முன்னாடி பாத்துப்புட்டா மோகமடி
பின்னாடி நின்னுப்புட்டா தாகமடி.
ஓர விழி உள்ளே நுழையுதடி.
ஒய்யாரப் பேச்சு கொள்ளையடிக்குதடி.

வளைந்த புருவம் வளைத்துப் போடுதடி.
நெளிந்த முடி நெஞ்சை அள்ளுதடி.
ஏர் நெற்றி திகைப்பில் ஆழ்த்துதடி.
செவ்விதழ் வசியம் பண்ணுதடி.

உன் அங்க அசைவுகள் எல்லாம்
இந்த ஆண் மனசை எங்கங்கோ
தள்ளுதடி.
சொல்லிக்க ஏதேதோ தோணுதடி.
சொல்லிப்புட்டா பொல்லாத
வம்பாகிப் போகுமடி.

(ஓவியருக்கு வாழ்த்துகள்)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (24-Sep-20, 7:37 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 282

மேலே