நீங்கள் இதை செய்தீர்களா?

🇭🇷🇨🇺🇨🇼🇨🇼🇨🇾🇨🇿🇩🇰🇩🇯🇨🇷🇨🇮🇨🇷

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🇩🇴🇪🇨🇪🇬🇸🇻🇫🇯🇬🇶🇪🇷🇪🇷🇪🇪🇮🇪🇮🇲

மலரின் அழகையும்
மழலையின் சிரிப்பையும்
மழையின் ஸ்பரிசத்தையும்
தென்றலின் அணைப்பையும்
நிலவின் குளிர்ச்சியையும்
அருவியின் தாலாட்டையும்
குருவியின் கீதங்களையும்
குழந்தையின் குறும்புகளையும்
மாலை நேரத்தின் சுகத்தையும் அமைதியான இரவின் அழகையும்
நிம்மதியான வாழ்க்கையையும் அலையின் பரவசத்தையும்
நட்பின் பாசத்தையும்
பிறப்பின் புனிதத்தையும்
அனுபவிக்காமலே ....
பெரிதாக
எதையோ
சாதித்து விட்டதாக சொல்லி
"சமாதி "ஆகின்றார்கள்...


✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

மனிதா!
கடலை பார்
அது
தானும் வாழ்ந்து
எத்தனை
உயிரினங்களையும்
வாழ வைக்கின்றன...

மனிதா !
காடுகளைப் பார்
அது
தானும் வாழ்ந்து
எத்தனையோ
விலங்குகள் தாவரங்கள்
வாழ இடம் அளிக்கின்றன...

மனிதா
மலைகளைப் பார்
அது
தானும வாழ்ந்து
எத்தனையோ
நதிகள் ஆறுகள் உருவாக காரணமாகிறது ....

அந்ந
இயற்ககையில்
ஒரு பகுதியான
நீ மட்டும்தான்
சுயநலத்தோடு வாழ்கிறாய்
அதனால்தான்
நீ செத்து விடுகிறாயோ...?


*கவிதை ரசிகன்*

🇨🇼🇮🇪🇬🇶🇬🇶🇩🇰🇫🇯🇫🇯🇨🇾🇨🇺🇭🇰🇪🇷

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Dec-20, 8:51 pm)
பார்வை : 122

மேலே