அனுபவம் புதுமை💥

அனுபவம் புதுமை💥

பாரதி கண்ட புதுமை பெண்
இன்று பள்ளி அறையில்
பால் செம்பை கைதனில் தினித்து
கதவடைத்த அனுபவசாலி மங்கையர்கள்.
எத்தனை புரட்சிகரமான மேடை
பேச்சுக்கள்
எத்தனையோ ஆண் ஆதிக்க எதிர்ப்பு
பேச்சுக்கள்
அத்தனையும் எங்கே சென்றது என்ற
மிக பெரிய கேள்வியுடன்
தரையில் இறங்கிய விமானமாய் நான்.
தமிழ் பெண்ணாய் பிறந்து விட்டேன்
அது என்ன! அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
எல்லாம் ஒட்டு மொத்தமாய்
என்னுள் இன்று
சொந்தம் கொண்டாடியதே
மண்னை பார்த்த என் விழிகள்
என் மன்னனை பார்க்க தவறவில்லை
ஜல்லிகட்டு காளை என கவர்ந்துயிழுத்தான்
வீரம் அவன் மீசையிலும்
காதல் அவன் கண்களிலிலும் தெரிந்தது
கண்ணாளன் எனக்கு கச்சிதமானவன்
அவன் கரம் கொண்டு என் இடை தொட்டு
என்னை வீழ்த்திவிட்டான்
புது வெள்ளம் உடலேங்கும் ஆனந்த பரவாமாக
மிக பரவசமாக பெறுக்கெடுத்ததால்
பாவி அவன் என்னை முழுவதும் அவனுள் கடத்திவிட்டான்
தொட்டா சினுங்கி என சுருங்கிப்போன என்னை
அந்த உன்னத சிற்பி என்னை சிலைவடித்தான்
அந்த பொம்மலாட்டகாரனுக்கு தகுந்தார் போல் நடனமாடினேன்
காலகாலமாக பூட்டி, பூட்டி வைத்த சிதம்பர ரகசியத்தை உணர தொடங்கினேன்
ஆஹா! உன்னதம், உயரிய நிலை, உலகின்
உற்பத்தியின் உண்மை, பரிபூரண மனோநிலை, பூரணத்தவம் அடைந்த மகிழ்ச்சி, பரவசநிலை.
புரட்சி பேசிய வாய்
மெளனம் பேசியது.
ஆண் ஆதிக்கம் பேசிய வாய்
அன்பு கொண்டது
காதல் கொண்ட மனம் லேசானது
மானுட சங்கிலியின் மகோதன்னத்தை
உணர்ந்தது
ஆணும், பெண்ணும் சமம் அல்ல
ஆண் வேறு, பெண் வேறு
ஆண், பெண்ணுக்கு நிகர்.

- பாலு

எழுதியவர் : பாலு (14-Jan-21, 11:45 pm)
சேர்த்தது : balu
பார்வை : 272

மேலே