உன்னை கண்டுகொண்டேன்
உன் அழகில்
மயங்கியது
என் மனம் ...!!
உந்தன் பார்வையில்
என் பார்வை
ஒளியிழந்தது ....!!
உனது குரலின்
இனிமையில்
எனது குரலின் ஒலி
எனக்கு கேட்கவில்லை ...
நான் இழந்தவை எல்லாம்
திரும்பவும் கிடைத்தது
என்னுள் ஜோதியாக நீ ..
வந்தவுடன் ...!!
ஆம்...இறைவா
ஜோதி வடிவில்
உன்னை நான்
கண்டுகொண்டேன் ...!!
--கோவை சுபா