தனி நடை

கால் புதையக்
கிடைத்ததெல்லாம்
குளிர் ஊட்டும்
ஒளிர் பனி தான்.

கை பற்ற நினைத்ததுவும்
வளி மொழியும்
மரம் இவைதான்.

கண் பார்க்க
விரும்பியதும்
ஒளி ஊடும்
கதிரொளிதான்.

மனம் புகல
நினைத்ததுவோ
இனிது உரைக்கும்
தனிநடை தான்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (22-Mar-21, 11:29 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : thani nadai
பார்வை : 131

மேலே