சாலை இளம்தென்றலே சந்திரோதயமே
ஓலைக் கவிஞனும் தீட்டாத ஓவியமே
சேலையில் சித்திரமாய் செந்தமிழாய் வந்தாயோ
மாலையும் ஏங்குது பார்
--சிந் இ வெ
ஓலைக் கவிஞனும் தீட்டாத ஓவியமே
சேலையில் சித்திரமாய் செந்தமிழாய் வந்தாயோ
மாலையும் ஏங்குது பார்உன் னழகினில்
சாலை இளம்தென்ற லே !
----ஓ வி இ வெ
சாலை இளம்தென்ற லேசந்தி ரோதயமே
ஓலைக் கவிஞனும் தீட்டாத ஓவியமே
சேலையில் வந்தாயோ செந்தமிழ்ச் சித்திரமே
மாலையும் ஏங்குது பார்உன் னழகினில்
சோலைக் குயில்பா டுது !
---ஒ வி பஃ வெ