நான் கவிஞன் இல்லை
நீல வானில் வெண்ணிலா
சாளரத்தில் வீசும் இளந்தென்றல்
-----கவிதை வரவில்லை
மாலை மலர்கள் பூத்திருக்கும்
தோட்டத்தில் நடந்தேன்
-----கவிதை வரவில்லை
எதிர்பாராமல் அவளும் எதிரே
புன்னகையுடன் மெல்ல நடந்து வந்தாள்
----பின்னும் கவிதை வரவில்லை
ஏனெனில் நான் கவிஞன் இல்லை !