வாடா மலர்
வாடா மலர்க் கொண்டு இறைவனை
பாடி அர்ச்சித்தால் மனதால் கண்முன்னே
காட்சி தருவான் அவன் என்றார் ஆன்றோர்
'வாடா மலரும் உண்டா என்று
கேள்வி வந்தது அதற்கு அதுதான்
அன்பு என்னும் மாமலர் என்ற
பதிலும் கிடைத்தது நிறைவாய்